Home செய்திகள் இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரை பண்டல்கள், படகுடன் பறிமுதல்: இந்திய கடலோரக்காவல் படை நடவடிக்கை

இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரை பண்டல்கள், படகுடன் பறிமுதல்: இந்திய கடலோரக்காவல் படை நடவடிக்கை

by mohan

இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரை பண்டல்களை இந்திய கடலோர காவல் படையினர் நடுக்கடலில் சுற்றிவளைத்து பறிமுதல் செய்தனர்.இந்திய காவல் படை வீரர்களைக் கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித்ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக்காவல் படையினர் வேதாளை கடற்பரப்பில் இன்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது ஒரு நாட்டுப்படகு சந்தேகத்திற்கிடமாக நடுக்கடலில் நின்றது. இதையடுத்து அப்படகை கடலோரக் காவல் படை வீரர்கள் சுற்றி வளைக்க முயன்றனர். அவர்கள் பிடியில் இருந்து தப்பிக்க நாட்டுப்படகிலிருந்த இருவர் கடலில் குதித்து தப்பி ஓடினர்.அவர்கள் விட்டுச் சென்ற படகை சோதனையிட்டபோது அதில் 13 பண்டல்களில் வலி நிவாரணி மாத்திரை ஒரு லட்சம் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரை பண்டல்களை நாட்டுப்படகுடன் கைப்பற்றி தப்பி ஓடியவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கையில் போதை மாத்திரையாக பயன்படுத்த கொண்டு செல்ல முயன்றிருக்கலாம் எனவும், இதன் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆர்.முருகன், செய்தியாளர், ராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!