Home செய்திகள் இராமநாதபுரம் உச்சிப்புள்ளியில் கடற்படை தினம் கொண்டாட்டம்..

இராமநாதபுரம் உச்சிப்புள்ளியில் கடற்படை தினம் கொண்டாட்டம்..

by ஆசிரியர்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கடற்படை தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு கடற்படை கிராமங்களை தத்தெடுத்து மருத்துவ முகாம்கள் மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்துவது கடற்படையினரின் வழக்கம். இந்த வருடம் இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் இயங்கி வரும் கடற்படை தளம் பருந்து சார்பாக இன்று 24.11.2017 கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சார்பாக உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு உச்சிப்புளி பருந்து கப்பற் படை கமாண்டிங் ஆபிசர் கேப்டன் குல்தீப் டங்சாலே மற்றும் இராமநாதபுரம் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் நலப்பணிகள் டாக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தனர். இரத்த தானத்தின் அவசியம் குறித்து கேப்டன் டங்சாலே பொது மக்களிடம் விளக்கம் அளித்தார். கடற்படை சார்பாக பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் உதவி அளிக்க கடற்படை தயாராக உள்ளது என பொது மக்களிடம் வேண்டிக் கொண்டார். டெங்கு கட்டுப்பாட்டு பணியில் இரத்தம் எவ்வாறு பிரிக்கப்பட்டு பல நபர்களுக்கு பிரிக்கப்பட்டு பல வேறு முறையில் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் விளக்கம் அளித்து பேசினார்.

இம்முகாமில் கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 26 யூனிட் இரத்த தானம் வழங்கினர். மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார், கடற்படை நிலைய மருத்துவ அலுவலர் மேஜர் டாக்டர் வைரம், லெப்டினன்ட் கமாண்டர் டாக்டர் சீனிவாசுலு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிளாரட், இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் விநாயக மூர்த்தி ,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன்,சுகாதார ஆய்வாளர்கள் முனியாண்டி,கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com