மதுரை போடி லயன் பழைய காலனி பகுதியில் வெள்ளி கண் செந்தில், முருகன் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் இதே பகுதியில் வசித்து வருகின்றனர் இருவரும் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு தத்தனேரி பகுதிக்கு சென்று மீண்டும் இவர் குடியிருக்கும் போடி லயன் பழைய காலனி பகுதிக்கு வரும் பொழுது பத்து பேர் சூழ்ந்து கொண்டு இருவரையும் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அறிந்த எஸ்எஸ் காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரனையில் இருவர் மீதும் கொலை, கொள்ளை பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே பகுதியில் வசித்து வரும் லோகேஷ், பாலா, சிவகுமார் என்பவருக்கும் இவர்களுக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
மேலும் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்.
You must be logged in to post a comment.