10
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அடுத்து பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனூர் குடிநீர் டேங்க் ஆபரேட்டர் தர்மர்.வயது 53. இரவு நேர பணிக்கு சென்ற போது குடிநீர் ஆபரேட்டர் அறையில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததார்.
இச்சம்பவத்தின் காரணமாக இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தலையில் அடித்து கொலை செய்த மர்ம நபர்களை பாவூர்சத்திரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.