9
சாணார்பட்டி காவல் சரகம் சாணார்பட்டி கோணப்பட்டி ரோட்டில் இன்று (24/09/2018) காலை கருப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிராஜன் (வயது 62) என்பவர் சொத்து தகராறு காரணமாக தனது மகன் சத்தியமூர்த்தி என்பவரை தலை மற்றும் இரண்டு கைகளையும் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டது.
இத்தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் உடனடியாக அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மகனை வெட்டிய சாமிராஜன் சாணார்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.