11
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இராஜசிங்கமங்கலம் தெருக்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை நம் உரிமை அனைத்து வாகண ஓட்டுநர்கள் நலச்சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது மரக்கன்றுகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் , இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கான உதவிகளை இஸ்லாமிக் சோசியல் சர்வீஸ் நிர்வாகிகள் செய்திருந்தனர்.இந்நிகழ்வில் தொழிலதிபர் அயூப்கான், சமூக ஆர்வலர் ரோஹன், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.