தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில் சங்கத்தின் தலைவர் கட்டி அப்துல்காதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயலாளர் நவாஸ்கான் அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் பழக்கடை சுலைமான், துணைச் செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகம்மது யூசுப், முருகானந்தம், மீரான், முகம்மது அப்துல் காதர், பிச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கந்து வட்டிக்காரர்கள் வியாபாரிகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்காசி முதல் அம்பை வரை உள்ள குண்டும், குழியுமான சாலைகளை சரிசெய்ய உடனடியாக வேண்டும். திருமலையப்பபுரம் வேண்டும் முதல் கோவிந்தப்பேரி வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், தென்பொதிகை நலச்சங்கம் சார்பில் திருமலையப்பபுரத்தில், இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும், வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் காமராஜ், சண்முகராஜ், அப்பாஸ், சுப்பிரமணி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் பாக்யராஜ் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.