14
இன்று (30.07.19) மருத்துவ தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாகிர் உசேன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் காவல் துறை உயர் அதிகாரிகள், நகராட்சி மேலாளர், வட்டார அரசு மருத்துவர் ராசிக்தீன், அரசு மருத்துவமனை டாக்டர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர், முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பல வேறு துறையினர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.