உங்கள் பகுதிகளில் நடக்கும் பக்கத்து வீட்டுத்தகராறுகள், தெருச்சண்டைகள், குரூப் மோதல்கள் போதைப்பொருட்கள் விற்பனை குறித்து ஏதாவது முன்கூட்டிய தகவல்கள் கிடைத்தால் அந்த தகவல்களை மதுரை மாநகர சரக காவல் உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் பகிரும்படி கேட்டுக்கொள்கிறோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மதுரை மாநகரில் நடைபெரும் காயவழக்குகள், கொலைமுயற்சி வழக்குகள் மற்றும் கொலை வழக்குகள் போன்றவற்றை தடுப்பதற்காக பொதுமக்களாகிய நீங்கள் உடனுக்குடன் தகவல்களை பரிமாற்றம் செய்தால் காவல்துறைக்கு மிகவும் பயனுள்ளதாகவும், கொடுங்குற்றங்கள் நடைபெறும் முன்பே அவற்றை குறித்த தகவல்கள் அளித்தால் அக்குற்றங்களை தடுக்கவும் செய்யலாம்.
நீங்கள் கொடுக்கும் தகவல்கள் மற்றும் உங்கள் பெயர் முகவரி இரகசியம் காக்கப்படும்…. மதுரை மாநகர காவல் துறை கேட்டுக் கொள்கிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.