9
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (38). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீழப்பெருவிளை பகுதியை சேர்ந்த நிஷாந்த் (27) மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை பிடித்து நைசாக திருடி கொண்டு ஓடினார். இதனை பார்த்த பொதுமக்கள் கையும் களவுமாக நிஷாந்த்தை பிடித்தனர். தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராபர்ட் செல்வ சிங் குற்றவாளி நிஷாந்த்தை கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.