8
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர்(52) . இவரது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.சம்பவத்தன்று வடக்கன்பட்டு பகுதியை சேர்ந்த சுதீஷ் மற்றும் அஜீஸ் ஆகியோர் எஸ்தர் அவர்களின் மகளை கிண்டல் அடித்திருக்கிறார்கள். இதனை எஸ்தர் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த சுதீஷ் மற்றும் அஜீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து எஸ்தர் அவரின் வீட்டில் காம்பவுண்டில் நுழைந்து அவரது கணவரின் ஆட்டோவை உடைத்து , கெட்டவார்த்தை பேசி , கொலை மிரட்டல் விடுத்தார்கள். பின்னர் எஸ்தர் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகரன் குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தி வி காளமேகம்
You must be logged in to post a comment.