6
குற்றாலத்தில் இருந்து கம்பம் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மதுரை காளவாசல் சிக்கனல் அருகில் வரும்போது பேருந்து ஓட்டுநர் இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் தேனி மெயின் ரோட்டில் திரும்பியதால் இரு சக்கர வாகனம் பேருந்தின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது.இதில் இருசக்கர வாகனத்திலிருந்த கோச்சடையை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது .உடனடியாக அங்கிருந்தவா்கள் 108 தகவல் கொடுத்தனா்.25 நிமிடங்கள் கழித்து வந்த 108ல் ஏற்றிமதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியான காளவாசல் பகுதியில் நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோாிக்கை விடுத்துள்ளனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.