11
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77வது வார்டு மீனாட்சி மில் பழைய காலனி அண்ணாநகர் பகுதியில் கழிவுநீர் சாலையில் பாதாள சாக்கடை நீர் சாலையில் வழிந்து விடுவதாகவும் மேலும் துர்நாற்றம் வீசுவதாகவும் அருகிலேயே குடிநீர் குழாய் இருப்பதால் நோய்த்தொற்று ஏற்படுவதாகவும் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் உடனடியாக சாக்கடை கழிவுகளை அகற்றி பாதாள சாக்கடை நீர் வெளியே வராமல் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.