மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு பழைய கருப்புசாமி கோவில் அருகே் ஜான் பிரிட்டோ இவரது மகன் ஜோசப் செல்வராஜ் வயது 40 பசுமலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் செக்யூரிட்டியாக ஆக பணிபுரிகிறார் இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அளவுக்குமீறி குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் காளவாசல் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார் அப்போது பைபாஸ் ரோடு நேரு நகர் கருப்புசாமி கோவில் அருகே நிதானம் இல்லாமல் வரும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார் கை கால் மற்றும் தாடை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகே உள்ள ஆட்டோவை பிடித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் இவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து மருத்துவமனையில் சென்று பார்த்த போது இவர் அளவுக்கு அதிகமான அளவு அதிகரித்துள்ளது தெரிய வந்தது நல்வாய்ப்பாக பின்னால் எந்த ஒரு கனரக வாகன வராததால் காயத்துடன் உயிர் தப்பினார் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வாகனத்தை இயக்கி வருகிறார்கள் இதனை காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு மதுபோதையில் வாகனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் கடுமையான அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.