திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை அருகே திடீர் தீ விபத்து விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அருகே உள்ள சரவணப்பொய்கையில் உள்ளது சரண பொய்கை அருகே உள்ள சுற்றுச்சுவர் காண கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதற்காக அடர்ந்து வளர்ந்துள்ள காய்ந்த முள் மற்றும் இலை தழைகளை ஒரு ஓரமாக கொட்டி வைத்திருந்தார்கள் இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் திடீரென குப்பையிலிருந்து தீ மளமளவென எரியத் தொடங்கியது இதை பார்த்த அப்பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தின இதனால் தீயானது மழை பகுதிகளுக்குப் பரவாமல் எடுக்கப்பட்டது தீ விபத்து குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் விபத்தின் காரணமாக தீ பிடித்து எரிந்ததால் அல்லது யாரேனும் சிகரெட்டைக் கொடுத்து அதில் அணைக்காமல் போட்டார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனினும் துரிதமாக செயல்பட்டு காட்டுத்தீயாக மாறாமல் கட்டுக்குள் கொண்டுவந்து தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.