Home செய்திகள் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதியளித்த முதல்வர் அறநிலைலத்துறை அமைச்சருக்கு மனமார்ந்த நன்றி. மதுரை ஆதினம் பேட்டி.

பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதியளித்த முதல்வர் அறநிலைலத்துறை அமைச்சருக்கு மனமார்ந்த நன்றி. மதுரை ஆதினம் பேட்டி.

by mohan

தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், 293 வது மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரியர் ஆதின மடத்தின் வெளியே மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்து அவர் பேட்டி அளித்து பேசுகையில்,ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன்.பட்டின பிரதேசம் நடத்துவது குறித்து, என்னுடைய கோரிக்கையை வைத்திருந்தேன். அதனை ஏற்ற முதல்வருக்கும், அறநிலைத்து துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.முதல்வர் அனைத்து சமூகத்தையும் அரவணைத்துப் போக வேண்டும்.பட்டின பிரவேசத்துக்கு முதல்வர் அனுமதி அளிப்பார் என நினைக்கவில்லை.பட்டின பிரவேசம் என்றால், என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும். அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லி விட்டார், இனிமேல் சொல்ல மாட்டார்.ஆதீன மடத்தில் பாஜக, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் ,அதை கண்டுகொள்ள போவதில்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள்.முந்தைய ஆதீனம் அதிமுக அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தாரே.அதிமுக, திமுக ஆட்சிகளின் போது அவைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் அப்படி எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது.ஆளும் கட்சி அரசியல்வாதிகள் மிரட்டல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.ஆதீன மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோவிலில் அறநிலையத்துறை பெண் அதிகாரி முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார்.அது குறித்து அரசுக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் புகார் அனுப்பப்பட்டு உள்ளது.ஏழை, எளியோர் உள்ளிட்ட அனைத்து மக்களும் முழுமையாக சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம் வாங்கும் நடைமுறையை அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சன்யாசி தர்மங்களை ஆதீனங்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என, எம்.பி. சு.வெங்கடேசன் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,சந்நியாச தர்மங்களை நான் முழுமையாக பின்பற்றுகிறேன் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்காரர்கள் அவ்வாறு தான் பேசுவார்கள்.இந்து மதத்தை இழிவாக பேசுவது யாராக இருந்தாலும் நான் கேள்வி கேட்பேன், குரல் கொடுப்பேன். இது ஆன்மீக அரசா என்பது சொன்னவர்களின் கருத்து.என் கருத்தை இப்போது சொல்ல முடியாது. இப்போதுமாட்டேன். சொல்ல .தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது சைவ சமயத்திற்கு இனிப்பான செய்தி.என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.திமுக ஓராண்டு நிறைவு பெற்றது குறித்து கருத்து சொல்ல முடியாது. சொல்ல மாட்டேன்.பிரதமர் மோடியை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் முடிவு குறித்த கேள்விக்கு,மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றார்.மற்ற ஆதீனங்கள் அனைவரும் அவர்களோடு அடிபணிந்து செல்கின்ற பொழுது நான் மட்டும் ஏன் எதற்காக எதிர்த்து நிற்க வேண்டும். அதே காரணத்தினால் நானும் அவர்களோடு ஒன்றிணைந்து போய்விட்டேன் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் ஊரோடு ஒத்துப் போய் விட்டேன்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!