மூன்று நாட்களுக்கு மேலாக திறந்து கிடக்கும் தெரு விளக்கு மீட்டர் பொருத்தப்பட்ட டைமர் சுவிட்ச் பாக்ஸ் விபரீதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71வது வார்டு பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு கணபதி நகர் பகுதியில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மீட்டர்உடன் டைமர் அமைத்துள்ள தெரு விளக்கு தானாக அணைந்து எரியும் டைமர் சுவிட்ச் பாக்ஸ் ஒன்று உள்ளது இது கடந்த 3 நாட்களுக்கு மேலாக திறந்தே கிடக்கிறது இப்பகுதியில் குழந்தைகள் அதிக அளவில் விளையாடுகின்றன விளையாட்டாக சென்று குழந்தைகள் யாரேனும் அதில் கை வைத்து விட்டு ஏதேனும் அசம்பாவிதம் நடக்கிறது என ஐயம் ஏற்படுகிறது மேலும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடிக்கடி மழை பெய்வதால் திறந்து கிடக்கும் பெட்டியில் தண்ணீர் புகுந்து மின்சாரம் பாய்ந்து தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது என குற்றச்சாட்டும் வைக்கின்றன மாநகராட்சி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றன மேலும் பல இந்தப் பகுதியில் தெரு விளக்குகள் பல இடங்களில் எரியவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர் விபரீதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுப்பார்களா மாநகராட்சி மின் வாரிய அதிகாரிகள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.