Home செய்திகள் வங்கியில் திடீர் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு பெரும் அசம்பாவிதம் வைத்த தீயணைப்பு துறையினர்.

வங்கியில் திடீர் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு பெரும் அசம்பாவிதம் வைத்த தீயணைப்பு துறையினர்.

by mohan

 மதுரை ஆரப்பாளையம் ஞான ஒளி புரம் பகுதியில் செயல்பட்டுவரும் கரூர் வைசியா பேங்க் செயல்பட்டு வருகிறது இதில் தரைதளத்தில் வங்கியும் முதல் தளத்தில் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் மண்டல அலுவலகத்தில் உள்ள குளிர்சாதன பெட்டியில் புகை வந்துள்ளது சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது உடனடியாக வங்கி ஊழியர்கள் வெளியேறிவிட்டார்கள் தீ விபத்து குறித்து மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமை யிலான மதுரை டவுன் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு உள்ளே சென்று தீயை அணைத்தனர் இந்த தீவிபத்தில் ஏசி சேர்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் வங்கியில் உள்ள மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதுநல்வாய்ப்பாக ஊழியர்கள் அனைவரும் வெளியே வந்ததால் தீ விபத்தில் காயமும் யாருக்கும் ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்து கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com