மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் – திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் வெள்ளக்கல் கண்மாய் பகுதியில் இறந்து மூன்று நாட்கள் ஆன உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.குடிபோதையில் இறந்தாரா.? அல்லது யாரும் கொலை செய்தனரா.? என்ற கோணத்தில் மர்ம மரணம் குறித்து அவனியாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் கண்மாய் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற தனியார் நிறுவன குடோன் வாட்ச்மேன் பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது.இதைக்கண்ட அவர் அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் இறந்த உடலை ஆய்வு செய்த போது உடல் அழுகிய நிலையில் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் என்பது தெரியவந்தது. மேலும்., இறந்து மூன்று நாட்களாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இறந்தவர் யார் எனவும்.? குடிபோதையில் தண்ணீருக்குள் தவறி விழுந்தாரா.? அல்லது யாரும் கொலை செய்து உடலை வீசிவிட்டுச் சென்றனரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இறந்த வாலிபரின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.திருப்பரங்குன்றம் – அவனியாபுரம் சாலையில் உள்ள கண்மாய் பகுதியில் உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.