மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் தென் மண்டல அளவிலான தலைவர் கிரிக்கெட் லீக் டிசிஎல் காலிறுதி அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது போட்டியை.டாஸ் போட்டும் கட்சியினர் பவுலிங் செய்ய பேட்டிங் செய்து பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கிவைத்தார்சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். 16 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் வெற்றி பெறும் அணிஇறுதிப் போட்டியில் பங்கேற்கும். முதல் லீக் போட்டியில் மதுரை வடக்கு தெற்கு மாவட்ட அணி மதுரை மாநகர் வடக்கு தெற்கு மாவட்ட அணி பங்கேற்றதுதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் கூறியதாவது.வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை மூ லம் சுமார் 3000 கோடிக்கு மேல் பதிவுகள் நடைபெற்று சுமார் சுமார் 600 கோடிக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது இதே போல அனைத்து துறைகளும் லாபத்தில் இயங்கும் படி நடவடிக்கை எடுக்கப்படும்சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் மாண்புமிகு ஆக மாறி மக்கள் பணியாற்றுவார்வேளாண் துறை மானிய கோரிக்கை மூலம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க அறிவுறுத்தப்படும்சித்திரை திருவிழாவிற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசித்து வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்அனைத்து தொகுதிகளிலும் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்கப்படும்என்று தெரிவித்தார். இதில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், வடக்கு மாவட்ட இளைஞரணி ஜிபி ராஜா வடக்கு மாவட்ட மாணவரணி மருது, வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்தி, திமுக ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, சோழவந்தான் ஸ்ரீதர், சிபிஆர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் சேகர், சோழவந்தான் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ், தொமுச தலைவர் பாலசுப்பிரமணி, தெற்கு ஒன்றிய இளைஞரணி வெற்றிச்செல்வன், சோழவந்தான் பேரூர் செயலாளர் முனியாண்டி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை பங்களா மூர்த்தி வக்கீல் முருகன் பெரியசாமி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சசிக்குமார் மற்றும் வழக்கறிஞர் ராஜாஜிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.