மதுரை மாவட்டம் ஊமைச்சிகுளம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் அவரது மனைவி வள்ளி ஈஸ்வரி நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று இரவு 8 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது உடனடியாக 108 அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கவே மதுரை K புதூரில் இருந்து இணைப்பை கொடுத்து உடனடியாகஊமைச்சிகுளம் வாகனம் கிளப்பியது ஓட்டுநர் இருளாண்டி மற்றும் மருத்துவ உதவியாளர் சின்ன கருப்பு விரைவாக சென்றனர் 8 20 க்கு ஏறியபோது வாகனம் கிளம்புவதற்கு தயாராக இருந்தது இந்த நிலையில் பிரசவ வலி அதிகமாகி வள்ளி ஈஸ்வரிக்கு 108 அவசரகால ஊர்தியில் சுகப்பிரசவம் ஆனது இதில் வள்ளி ஈஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது தாயும் சேயும் நலமுடன்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் 108 அவசர கால ஊர்தியில் கிளம்பும் நேரத்தில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சின்ன கருப்பு மற்றும்ஓட்டுநர் இருளாண்டி ஆகியோரை ஊமைச்சிகுளம் கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.