Home செய்திகள் திருநகரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது.

திருநகரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பகுதிகளில் தொடர் வழிப்பறி திருட்டில் ஈடுபடுவது குறித்த புகார் அளிக்கப்பட்டது.மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் செந்தில்குமார் உத்திரவின் பேரில்3 தனிப்படை அமைக்கப்பட்டு திருநகர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.வழிப்பறி நடைபெற்ற இடங்களில் சிசிடிவி காட்சிகளை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தபோது தொடர் திருட்டில் ஈடுபட்டமுக்கிய குற்றவாளியான கோவில் பாப்பா குடி அஜித் அஜித் குமார், விக்கி (எ) விக்னேஷ், உள்ளிட்ட 2 பேரை தேடி வந்தனர்.இந்நிலையில் முக்கிய குற்றவாளி விக்னேஷ் ஒத்தக்கடையில் பதுங்கியிருந்த தகவலையடுத்து தனிப்படை போலீஸார் ஆய்வாளர் பிரபு, Si தென்னரசு, மகேஸ், அலியார், வைரவேல் முத்துகுமார் ஆகியோர் விக்னேஸ், அஜித் ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 லட்சம் மதிப்புள்ள தங்கம் , 2 இருசக்ர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com