Home செய்திகள் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்ட்டதால் பரபரப்பு.

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்ட்டதால் பரபரப்பு.

by mohan

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான 76 மாத கால டி.ஏ., அகவிலைப்படி வழங்காததை கண்டித்து, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையை முன்பு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றார் அமைப்பு அதன் சார்பில் தேவராஜன் அவர் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது , கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை வழங்கிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றியமைக்க வேண்டும்,மே 2020 முதல் இறந்த மற்றும் தன் விருப்ப ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தினால், போக்குவரத்து பணிமனை பணிகள் பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com