Home செய்திகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான எஸ்.டி.பி.ஐ ஆலோசனைக் கூட்டம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான எஸ்.டி.பி.ஐ ஆலோசனைக் கூட்டம்.

by mohan

மதுரை வடக்கு மாவட்ட தொகுதி நிர்வாகிகளுடன் நடைபெற்றது. இதில் தலைமைத் தேர்தல் பணிக்குழு சார்பாக மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, செயலாளர் நஜ்மா பேகம், மாவட்ட தலைவர்பிலால் தீன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினார் பொதுச்செயலாளர் ஜியாவுதீன் வரவேற்றார் செயலாளர் கமால் பாட்சா நன்றி பாராட்டினார்..கூட்டத்தில் மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் போட்டியிடும் வார்டுகள் வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டது மாநகராட்சி வார்டு எண் 28, 7, 37 மேலூரில் 20, 22, வேட்பாளர்கள் அனைவரும் வருகின்ற ஜனவரி 31 திங்களன்று வேட்புமனு தாக்கல் செய்ய தீர்மானிக்கபட்டன.தேர்தல் பணிகளை ஒழுங்குப்படுத்த 28வது வார்டில் மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான், 37வதுவார்டில் மாவட்ட அமைப்புசெயலாளர் பகுர்தீன்,7வதுவார்டில் பொருளாளர் அப்துல் ரகுமான், செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், இம்தியாஸ் அஹமது, மேலூர் 20 & 22, வார்டில் பொதுச்செயலாளர் ஜியாவுதீன், செயலாளர் கமால் பாட்சா, உட்பட பத்து பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது இக்குழு தேர்தல் பணிகளை கண்காணிப்பது நூறு சதவிகிதம் வெற்றி பெற வேண்டும் அதற்கேற்ப பணியாற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மதுரை வடக்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com