மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை இருந்து நத்தம் வழியாக சிங்கம்புணரி சென்ற அரசு பேருந்து குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் புறப்பட்டது இந்தநிலையில் அழகர்கோவில் சாலை அமைந்துள்ள வடக்கு சட்ட மன்ற அலுவலகம் அருகே உள்ள மரத்தில் பலமாக மோதியது இதில் ஓட்டுநர் சேகரன் நடத்துனர் முருகன் பேருந்தில் பயணம் செய்த தனியார் பேருந்து நடத்துனர் சரவணகுமார் ஆகியோர் காயம் அடைந்தனர் அருகில் உள்ள பொதுமக்கள் உடனடியாக 108 அவசர கால ஊர்தி தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த 108 அவசர கால ஊர்தி காயமடைந்த 3 பேரையும் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர் சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் காயம் ஏற்படவில்லை அதிகாலையில் அரசு பேருந்து மரத்தில் மோதியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.