16
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவிற்கு விருப்ப மனு கொடுக்கப்பட்டது.மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.இக்கோவிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறங்காவலர் நியமிப்பதற்கு அறிவித்துள்ளனர்.இதையொட்டி பாஜக விவசாய அணி மாநில செயலாளர் மணிமுத்தையா சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவிற்கு விருப்பமனு கோவில் செயல் அலுவலர் இளமதியிடம் வழங்கினார். விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆதிசங்கர் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.