11
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள கோமஸ்ப்பாளையத்தில் பள்ளி வாசலில் கொட்டப்படும் குப்பைகளில் மழை நீர் தேங்கி கழிவு நீர் தேக்கமாக காணப்படுவதால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக நகரின் பல இடங்களில் குப்பைகளை அகற்றாமல் இருப்பதால் அங்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்றவைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் பள்ளியின் முன்பு கொட்டப்படும் குப்பைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து இந்த பகுதியினை சுத்தம் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.