9
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார்..கூட்டத்தில் புதிய ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காமராஜ், பகத்சிங், அறிமுகம்* செய்யப்பட்டது. மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜ் பேசியதாவது: ராஜபாளையம் ஊராட்சியில் உள்ள அடிப்படை வசதிகள் அனைத்தும் படிப் படியாக நிறைவேற்றபடும் என் உறுதி அளித்தார்.உடன் துணை தலைவர் துரைகற்பகராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், சத்தியமூர்த்தி மற்றும் உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.