Home செய்திகள் தடுப்பூசி போட்டுக் இலவச சாப்பாடு சாப்பிடுங்க ஓட்டல் உரிமையாளரின் செயல் பொது மக்களிடையே வரவேற்பு.

தடுப்பூசி போட்டுக் இலவச சாப்பாடு சாப்பிடுங்க ஓட்டல் உரிமையாளரின் செயல் பொது மக்களிடையே வரவேற்பு.

by mohan

திருமங்கலம் நகர் நான்கு வழிச்சாலை உசிலம்பட்டி ரோடு சந்திப்பில் உள்ள பாரத் ரெஸ்டாரண்டில் இன்றும் நாளையும் (அக்டோபர் 29,30) என இரு தினங்கள் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.இந்த முகாமில் கலந்து கொண்டு முதல் டோஸ் அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் மேலும் திருமங்கலம் பாரத் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் பாரத் கூறுகையில்..கொரானா பெரும் தொற்று நம் நாட்டை விட்டு ஒளிவதற்கு நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த இலவச உணவு வழங்கும் நடைமுறையை விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளேன் என தெரிவித்தார் இவரது செயலானது அப்பகுதி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

செய்தியாளர்.வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com