34
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் 13 மற்றும் 15 வார்டு காலி பதவியிடங்களுக்கு நடைபெற்று வரும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று பெரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.13 மற்றும் 15வது வார்டு பகுதியில் அமைந்துள்ள 17 வாக்குசாவடி மையங்களில் காவல்துறையினர் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.மேலும் வாக்குசாவடியில் வாக்களர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டும், முக கவசம், கையுறை வழங்கி தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை அனுமதித்து வருகின்றனர்.மேலும் 13 மற்றும் 15-வார்டு வாக்கு சாவடி மையங்களில் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
You must be logged in to post a comment.