Home செய்திகள் நடு பாலத்தில் லாரி பழுதானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

நடு பாலத்தில் லாரி பழுதானதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

by mohan

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி ரேஷன் பொருட்கள் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பைபாஸ் சாலை வ உ சி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமா திடீரென பழுதாகி நடு பாலத்தில் நின்றது இதனால் இரு புறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவலறிந்த போக்குவரத்து போலீசார் லாரியை அகற்றும் பணியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர் ஒரு பகுதியிலிருந்து வரும் வாகனத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு லாரியை பாலத்தில் இருந்து கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது எனினும் போலீசார் துரித செயல்பாட்டினால் அவசர கால ஊர்தி அதிகம் செல்லும் பகுதியாக இருந்ததால் அவசரகால ஊர்திகள் இந்தவித பாதிப்பு இன்றி விரைந்து சென்றது குறிப்பிடத்தக்கது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!