Home செய்திகள் வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படியான தலைவர்களின் புகைப்படங்களை 60 நாட்களில் நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படியான தலைவர்களின் புகைப்படங்களை 60 நாட்களில் நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

by mohan

வாகனங்களில்வெளிப்புறத்தில்தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. வாகனங்களில் அரசியல் கட்சி கொடிகள் மற்றும் மற்றும் கட்சியின் தலைவர்களின் புகைப்படங்கள் அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நேரங்களில் பயன்படுத்தலாமே தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல – நீதிபதிகள் கருத்துவாகனங்களில் தடைசெய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் விதிமுறை மீறிய நம்பர் பிளேட்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு.அதில், 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். வழக்கறிஞர் என ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.மேலும் மற்ற மாநிலங்களில் அதிக அளவு சட்டக் கல்லூரி உருவாகத் தொடங்கியுள்ளது இதன்காரணமாக ரவுடிகள் பலர் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டக்கல்லூரியில் இருந்து பணம் கொடுத்து பட்டங்களைப் பெற்று வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் பயன்படுத்தி காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து வருகின்றனர்.எனவே 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும் மேலும் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை சட்டக்கல்லூரி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வு) புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது..தற்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்.. நீதிபதிகள் தற்போது வாகன போக்குவரத்து அதிகரிப்பு ஏற்ப தேசிய நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பது இல்லை என்றும் வெளிச்சம் குறைவான இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் ஜீப்ரா கிராஸ் மற்றும் தேவையான இடங்களில் பேரிகார்டு அமைத்து சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் கூறியுள்ள நீதிபதிகள்..வாகனங்களில் கடைபிடிக்க வேண்டியவற்றை கூறியுள்ளதாவது.. தற்போதைய சூழலில் வழக்கறிஞர்/ பிரஸ் /போலீஸ் போன்ற ஸ்டிக்கர்களை வாகனங்களில் அதிகமாக ஒட்டி உள்ளனர் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் அதிக அளவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது இதுகுறித்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.இதேபோல் தங்களது வாகனங்களில் அரசியல் கட்சியின் கொடிகள் தலைவர்களின் புகைப்படங்கள் ஜாதி கட்சி தலைவர்களின் படங்கள் போன்றவை வெளிப்புறங்களில் தெரிவதுபோல் பயன்படுத்தப்பட்டு வருகிறது இது காவல்துறையினர் தங்களது வாகனத்தை நிறுத்தக்கூடாது சோதனை செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது..அரசியல் கட்சியினர் தங்கள் கொடிகளை தலைவரின் புகைப்படங்களும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தலாம் மற்ற நேரங்களில் இதன் பயன்பாடு தேவையற்றதாக நீதிமன்றம் கருதுகிறது. மேலும் இதனை பயன்படுத்த சட்டத்திலும் அனுமதி இல்லை.. எனவே இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிக்கின்றது இதனை காவல்துறை தலைவர் DGP, உள்துறை அமைச்சகம் ,போக்குவரத்து துறை இயக்குனர் ஆகியோர் வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்வாகனங்கள் விதி முறைகளை பின்பற்றி வருடந்தோறும் உரிமம் புதுப்பித்தல் , வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள லைட் (முகப்பு விளக்கு) முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதனை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது அபராதம் விதித்து முகப்பு விளக்குகளை அதிகாரிகள் நீக்க வேண்டும் வாகனத்தின் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் அல்லது நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள் இருந்தால் அதனை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.வாகனத்தின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்க வேண்டும். வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.. என்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது இதனை 60 நாட்களில் நடைமுறைபடுத்த வேண்டும் இதனை மீறும் வாகனங்கள் அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!