8
மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை 18வது வார்டு மாநகராட்சிக்குட்பட்ட பொற்குடம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை நிரம்பி உடைந்து சாலையில் செல்கிறது. மேலும் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் குறை கூறுகின்றனர். கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக இந்த பாதாள சாக்கடை நீரை அடைப்பை சரி செய்து சாலையில் சென்று கொண்டு இருக்கும் நீரை அகற்றி அதற்கு கிருமிநாசினி தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.