15
கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்கையில் உள்ள சாவரப்பட்டியில் டிரைவர் நாகநாதனைக் கொலை செய்து, வாடகை காரை கடத்திய வழக்கில் கொட்டாம்பட்டி போலீசார், திருச்சியைச் சேர்ந்த ஜெயசுதாவை கைது செய்தனர்.மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஜெயசுதாவின் காதலன் விராலிமலை ஹரிஹரன் (30), செங்கல்பட்டு ஜெகதீஷ் (26), பெரோஸ் அகமது (34) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட கார், தப்பிக்க பயன்படுத்திய சுதாவின் கார், கொலைக்கு பயன்படுத்திய கயிறு, கத்தியை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.