Home செய்திகள் மத்திய அரசின் தனியார்மய கொள்கையை எதிர்த்து, எஸ்ஆர்எம் சார்பில் ஆர்ப்பாட்டம்:

மத்திய அரசின் தனியார்மய கொள்கையை எதிர்த்து, எஸ்ஆர்எம் சார்பில் ஆர்ப்பாட்டம்:

by mohan

மத்திய அரசின் தனியார்மய கொள்கையை கண்டித்து ,மதுரை ரயில் நிலையம் அருகில் எஸ்.ஆர்.எம். யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, எஸ்ஆர்எம்யு, உதவிப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், லாபத்தில் இயங்கும் விரைவு ரயில்கள் மற்றும் வழித்தடங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும், சரக்கு போக்குவரத்து ரயிலை தனியாருக்கு விற்கக்கூடாது, ரயில்வே குடியிருப்புகளை, ரயில் நிலைய விளையாட்டு மைதானங்களையும் ரயில் நிலைய வளாகங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், திரளானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலபேர் முதல் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!