மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் 151-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் வருகை தந்தார், அவருடன் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் 06.07.1870ஆம் ஆண்டு பிறந்தவர் பரிதிமாற்கலைஞர் இவரது இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி. தமிழ் மீது இவருக்கு அலாதி பற்று கொண்ட காரணத்தினால் தனது பெயரை தமிழ் மொழிக்கு ஏற்ப பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார். தமிழ்மொழியில் பல்வேறு கட்டுரைகள் கவிதைகள் புத்தகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். தமிழ் மொழியை செம்மொழியாக மாற்றக்கோரி முதன்முதலில் குரல் கொடுத்ததால் இவர் செம்மொழி கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.பல்வேறு தமிழ் மொழியான செம்மொழிக்கு பல்வேறு படைப்புகளை தந்த இவர் சிறு வயதிலேயே இயற்கை எய்தினார். இன்று அவருடைய பிறந்த நாள் என்பதால் அவர் வாழ்ந்து மறைந்த அவரது நினைவு இல்லத்தில் 151-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அணி சேகர் மதுரை சோழவந்தான், வடக்கு, தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.