மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி . பகுதியில் வசிப்பவர் முகமது அசன் (வயது 46 )இவர் தற்போது துபாயில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி ராஜி பானு (வயது 40) இவர்களுக்கு முகமது பைசல் (வயது 16) குல்சன் பாத்திமா (வயது18) ஆகியோர் விளாச்சேரி அரசு பள்ளியின் பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.தற்பொழுது இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு “20 “அடி பொது பாதையை பக்கத்தில் உள்ளவர்கள் மறைத்து சுவர் கட்டியுள்ளனர்.மேலும் அரசு பள்ளியின் அருகே உள்ள பாதையையும் அரசு அதிகாரிகள் முற்கள் மற்றும் பலகையை வைத்து மூடியுள்ளனர்.இதனால் பெண்கள் குழந்தைகள் வெளியே செல்ல முடியாமல் அவர்கள் வீட்டுக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு பக்கம் பத்தடி உயரமுள்ள காம்பவுண்டு சுவர் கட்டப்பட்டுள்ளது. மறுபக்கம் பாதையை மறைத்து தடுப்பு வேலிகள் முட்களை போட்டு மறைத்து உள்ளதால் வீட்டிற்கு செல்லவும் முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.இதன் அருகே உள்ள பக்கத்து வீட்டார் வீட்டை காலி செய்து சென்றுள்ளனர். மேலும் இதே பிரச்சனையில் பக்கத்தில் உள்ளவர்கள் வீடு கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் கடந்த (அதிமுக) ஆட்சியில் மூன்று வருடங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளிடமும் மூன்று வருடங்களுக்கு மேலாக புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லாததால் மிகவும் விரக்தியில் உள்ளனர் .பக்கத்து வீட்டில் வசிப்பவர் முகமது ஷரிப் இவர்கள் தங்களது சொந்த இடத்தில் வீடு கட்ட முடியாமல் வீட்டை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.சொந்த வீட்டில் வசிக்கவும் முடியாமல் வீட்டை விற்க முடியாமல் மிகவும் துயரத்திலுள்ள இவர்களுக்கு தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.