9
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.அந்த வகையில் இன்று முதல் தமிழக அரசு ஊர் அடங்கிய கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது அதாவது இன்று முதல் 50 சதவீத பயணிகளுடன் போக்குவரத்து இயங்கும் நகைக்கடைகள் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கவும்அதேபோல் ஜவுளி கடைகள் உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது.அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டத்தில் நகைக் கடைகள் ஜவுளிக்கடைகள் செயல்பட துவங்கியுள்ளது மேலும் பேருந்துகளும் 50 சதவீத பயணிகளோடு செயல்படத் துவங்கியுள்ளது.இந்த கூடுதல் தளர்வு காரணமாக சாலைகளில் வாகன ஓட்டிகள் அதிகமாக காணப்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.அதாவது மதுரை இயல்பு நிலைக்கு மெதுவாக திரும்புகிறது என்றே சொல்லலாம்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை
You must be logged in to post a comment.