12
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கண்மாயில் குளிக்கச் சென்ற பெண் தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.ராஜபாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் நல்லையா இவரது மனைவி ஆறுமுகத்தாய்(20) இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றது. இவர் விடுமுறை தினம் என்பதால் உறவினர்களுடன் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செங்குளம் கண்மாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.