Home செய்திகள் கட்டுப்பாடுகளுடன் வரும் 1-ஆம் தேதி முதல் துபாய்க்கு வாரம் 6 விமானங்கள், மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்.

கட்டுப்பாடுகளுடன் வரும் 1-ஆம் தேதி முதல் துபாய்க்கு வாரம் 6 விமானங்கள், மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்.

by mohan

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பினால் மதுரை விமான நிலையத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டது. குறிப்பாக, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய பெருநகரங்களுக்கு மட்டும் தினசரி ஐந்து முதல் ஆறு விமானங்கள் வரை மதுரை விமான நிலையத்தில் இருந்து சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில்.வெளிநாட்டு விமான சேவைகளான துபாய் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான போக்குவரத்திற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் வெளிநாட்டு விமான சேவைகளை நிறுத்திய பிறகு, தற்பொழுது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைந்த காரணத்தினால், மதுரை விமான நிலையத்திலிருந்து மீண்டும் துபாய்க்கு வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் வெளிநாட்டு விமான சேவைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ளதுவழங்குவதாக அறிவித்துள்ளது.

துபாய்க்கு சென்று வரும் இந்த வெளிநாட்டு விமான சேவையானது காலை 10.40 AM மணி அளவில் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருவதாகவும், பின்பு இங்கிருந்து 11.40AM மணி அளவில் துபாய் புறப்பட உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையானது வாரத்திற்கு 5 நாட்கள் அதாவது செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தேதிகளை தவிர்த்து மற்ற 5 நாட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.அதேபோல் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் காலை 11:55AM மணி அளவில் துபாயிலிருந்து மதுரைக்கு வருவதாகவும், மீண்டும் மதியம் 01.45PM மணி அளவில் மதுரையிலிருந்து துபாய்க்கு செல்ல உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சராசரியாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வாரத்திற்கு ஆறு விமானங்கள் துபாய்க்கு இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.இந்த விமான சேவையானது சுற்றுலா விசாவில் செல்லும் பயணிகளுக்கானது அல்ல மாறாக ஏற்கனவே வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடியவர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு வருகை புரிந்து தற்போது மீண்டும் பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்காக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விமானங்களில் பயணிக்கக்கூடிய பணிகள் கண்டிப்பான முறையில் கொரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடம் கையொப்பம் பெற்று மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; கட்டாயமாக இரண்டு நிலை கொரோனோ தடுப்பூசிகளில் முதல் நிலை தடுப்பூசி யாவது செலுத்தியிருக்க வேண்டும். இதுபோன்ற அறிவுரைகளும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!