மதுரை அருகேசோழவந்தானில் மினிபஸ் மற்றும் டிராக்டரில் பேட்டரிகள்,கார்செட் மற்றும் ஸ்பீக்கர் ஆகிவற்றை திருடிய ஒருவர் கைது மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.சோழவந்தான் மணி என்ற முத்தையா. 65.ஊரடங்கு உத்தரவால் இவருடைய கார்பார்க்கில் மினிபஸ்கள் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை நிறுத்தி வைத்துள்ளனர்.நேற்றைய முன்தினம் மினிபஸ் மற்றும் டிராக்டரை பார்த்த பொழுது இதிலுள்ள பேட்டரிகள்,கார்செட் மற்றும் ஸ்பீக்கர் திருடுபோனது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மணி என்ற முத்தையா சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் , சப் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்தார்.பின்னர் ,,விசாரணை செய்தபோது சங்கங்கோட்டை சேர்ந்த மருதுபாண்டி,32 என்பவர். தன்னுடைய கூட்டாளியுடன் மினிபஸ் மற்றும் டிராக்டரில் உள்ள பேட்டரி,கார்செட் மற்றும் ஸ்பீக்கர்கள் திருடியதாக, தெரிந்து.போலீசார் மருதுபாண்டிய கைது செய்து திருடிய பொருட்களை கைப்பற்றினர்.மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.