மதுரை டி.எஸ்.கே தன்னார்வ சேவை குழு அதாவது தானா சேர்ந்த கூட்டம் தலைவர் மணிகண்டன் தலைமையிலும், செயலாளர் ராஜேஷ், துணைத் தலைவர் நாகராஜ், பொருளாளர் ராஜேஷ், பி.ஆர்.ஒ.சரத்குமார் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் டாக்டர் ஜாஸ்மின் ராஜ்குமார் மற்றும் குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் ஏழைகளுக்கும், முதியோர்களுக்கும், தெருவோரத்தில் பசியால் இருப்பவர்களுக்கும் ஆரப்பாளையம் மற்றும் செல்லூர் பகுதியில் 500 க்கும் ஏற்பட்டவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில், மாஸ்க், கைஉறை வழங்கப்பட்டன. அசார், சரவணக்குமார், அன்பழகன், சாந்தமூர்த்தி, சங்கர் ஆகியோர் இந்த சேவை குழுவில் இணைந்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இவர்களை மதுரை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.