மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட வைகை வாய்க்காலில் பிறந்த ஒரு நாள் ஆன குழந்தை பிரேதம் ஒன்று மிதந்து வந்தது இதனை கைப்பற்றிய அலங்காநல்லூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த நிலையில் அதே பகுதியில் சற்று தள்ளி அதே பாசன பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது இதுகுறித்து இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதேபோன்று மதுரை நகர் மாட்டுத்தாவணி காவல் எல்லைக்குட்பட்ட ஆதரவற்ற நபர் உடல் கண்டெடுக்கப்பட்டது இந்த மூன்று உடல்களையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிறகு நேதாஜி மெடி டிரஸ்ட் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் உதவியுடன் தத்தனேரி சுடுகாட்டில் போலீசார் நல்லடக்கம் செய்தனர் ஹரிகிருஷ்ணன் இதுவரை பல ஆதரவற்ற பிரேதங்களை தனது சொந்த செலவிலேயே அடக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.