29
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியானது, மாநகராட்சி ஊழியர்களால் ஏற்கப்பட்டது.அதன்படி, மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி துணை ஆணையர் சங்கீதா தலைமை வகித்தார்.கீழ்கண்ட உறுதிமொழியை வாசித்து ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.குடும்பத்தில் உள்ள முதியோர்கள் நல்ல பராமரிப்பதோடு, கன்னியமாக நடந்து கொள்வேன்.மருத்துவமணைகள், வங்கிகள் போன்ற பொது இடங்களில், முதியோர்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் உள்பட உறுதிமொழியை எடுத்தனர்.இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் பொ. விஜயா, மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.