Home செய்திகள் மதுரையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 44 குற்றவாளிகள் கைது – 41 டூவீலர்கள் மீட்பு

மதுரையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 44 குற்றவாளிகள் கைது – 41 டூவீலர்கள் மீட்பு

by mohan

மதுரை மாநகரில் நடந்த இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க வேண்டி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர்( குற்றம் ) ராஜசேகரன், மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர்கள் ரமேஷ், ரவிபிரகாஷ் , ரவி மற்றும் வினோஜி இவர்களின் நேரடிப் பார்வையில் காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் 5 தனிப்படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.தொடர்ந்து தனிப்படையினர் கடந்த இரண்டு மாதங்களில் குற்றவாளிகளை தேடிவந்தனர். இதுவரை காணாமல் போன இருசக்கர வாகனங்களில் விலை உயர்ந்த புல்லட் வண்டி உட்பட 41 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன . அதில் நகர் சரகத்தில் 6 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது .இவைகளின் மதிப்பு சுமார் ரூ 17,50,000 / -ஆகும் . இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மதுரை மாவட்டம் துவரிமானைச் சேர்ந்த சூரியா , மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த கணேஷ் பிரவீன் உள்ளிட்ட 44 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் .இந்த குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படையினரை காவல் ஆணையர் தபிரேம் ஆனந்த்சின்கா மற்றும் காவல் துணை ஆணையர் ராஜசேகரன் அவர்கள் பாராட்டினார்கள் .

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com