Home செய்திகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் தனது இல்லத்தில் இருந்து சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் தனது இல்லத்தில் இருந்து சைக்கிளில் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர்.

by mohan

மதுரைநகரப் பகுதிகளில் காற்று மாசு ஏற்படுவதற்கு வாகனங்கள் வெளியேற்றும் புகை முக்கிய காரணமாக இருக்கிறது .வாகனங்கள் வெளியிடும் புகை கார்பன் ஆக்சைடு , மோனாக்சைடு , நைட்ரஜன் ஹைட்ரோகார்பன் , சல்பர் டை ஆக்சைடு போன்றவை மனிதர்களின் சுவாசத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றன .மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாகவும் இருக்கிறது . காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .இதன் ஒரு பகுதியாக வாரியத்தின் அனைத்துப் பணியாளர்களும் வாரம் ஒரு நாள் புதன்கிழமை மாசற்ற அலுவலக வாரம்- பயண நாள் என்பதை கடைப்பிடித்து வருகின்றனர் .இதனால் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வாரியத்தின் பணியாளர்கள் அனைவரும் தங்களது மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து , பொதுப் போக்குவரத்து , சைக்கிள் அல்லது மின் சைக்கிள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அலுவலகம் கின்றனர் .இதனைத் தொடர்ந்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது இல்லத்தில் இருந்து சுமார் 3.1/2 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் மதுரை மாவட்ட மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் வருகை தந்தார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com