13
மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு தனியார் கல்லூரி சார்பில் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் பெருத்திய பேருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் சிகிச்சை வழங்கிட வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு முடியும் வரை தங்களது கல்லூரியின் பேருந்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வழங்கியுள்ளது.
மேலும் தங்கள் கல்லூரி சார்பில் பேரிடர் காலத்தில் மதுரை மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதாகவும் தற்போது மருத்துவமனையில் சேர்க்கை உதவிக்கு எங்களது மாணவர்களைக் கொண்டு ஒரு குழு நியமித்து அவர்கள் மூலம் மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பல்வேறு உதவிகள் செய்து வருவதாகவும் தனியார் கல்லூரியின் சேர்மன் அண்ணா துரை தெரிவித்தார்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.