31
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் முள்ளை தவம் இவர் ஓவியராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது கொரானா பொது முடக்கம் அமலில் இருப்பதால் பள்ளிகள் திறக்காமல் இருப்பதாலும் தன் வீட்டிற்கு அருகாமையில் உள்ள குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வருகிறார். தேசிய தலைவர்கள், இயற்கைக்காட்சிகள் ,வன உயிரினங்கள் உள்ளிட்ட பொருட்களை வரைய கற்று தருகிறார். இதன் மூலம் ஆத்ம திருப்தி அடைவதாக அவர் கூறுகிறார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.