10
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் முதல் கண்ணுடையாள்புரம் வரை மூன்று இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து மன்னாடிமங்கலம் குருவித்துறை செல்லக்கூடிய தார்சாலை சேதமடைந்து உள்ளது .இதனால் வைகை அணையில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லும் குடிநீர் வீணாகிறது.மேலும், மூன்று கிலோமீட்டர் ரோடு சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்பட்டு சிலர் கீழே விழுந்து காயம் பட்டுள்ளனர் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக இந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு மூன்று இடங்களில் தண்ணீர் வீணாகி வருகிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து வீணாக செல்லும் தண்ணீரை சரி செய்யவும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.