9
மதுரை அண்ணாநகர் வண்டியூர்வழியாக சென்ற அரசு பஸ் மீது கல் வீசி விட்டுஇரண்டுபேர் ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த உசிலம்பட்டி செல்லம்பட்டியை சேர்ந்த சக்திவேல் 46 என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் விருதுநகர் மாவட்டம் புல்வாய்க்கரை இடயபட்டியைச் சேர்ந்த மூர்த்தி மகன் வைர மணி மற்றும் யாகாப்பாநகரை சேர்ந்த ராஜ்குமார் 26 என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.